சிவானந்தவல்லி!

நேரிழை யாவாள் நிரதிச யானந்தப்
பேருடை யாளென் பிறப்பறுத்து ஆண்டவள்
சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை
சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.  – (திருமந்திரம் –78)

விளக்கம்:
சிறந்த நகைகளை அணிந்துள்ள சக்தி, சிவானந்தவல்லி என்ற பெயர் கொண்டவள். எல்லையற்ற சிறப்பை கொண்ட அவள் என் பிறப்பை போக்கி ஆட்கொண்டாள். சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவாவடுதுறை யாகிய திருத்தலத்தைத் தனதாக உடையவள். அந்த சக்தியின் திருவடியை சேர்ந்திருந்தேனே!

(நேரிழை – சிறந்த நகைகளை அணிந்த பெண், பிறப்பறுத்து – அடுத்து பிறவியில்லாமல் செய்து, சீருடையாள் – புகழ் உடைய, செல்வம் உடைய, பதம் – திருவடி )

Jeweled with rich ornaments, named Eternal Bliss,
She remove our further births.
Of great fame, Mistress of Avaduthurai Siva,
I reached her Holy Feet and Surrender.