இனித்தாய் எங்கும்

புதிதாய்த் திருமணம் ஆன தம்பதி அவர்கள். மிகவும் சந்தோஷமாக இருந்த நேரத்தில் தலைவன் தலைவியிடம் சொன்னான்.

இனித்தாய் அங்கும் இங்கும் எங்கும்
இனித்தாய் கடிந்தால்சொல் வந்து.

இதைக் கேட்டு மனம் புண்பட்ட தலைவி மென்மையாகக் கடிந்தாள்.

இனித்தேன் இனிப்பேன் இனியும் நீங்குவேன்
இனித்தாய் தனைபழித் தால்.