திருமந்திரம் சிவபெருமானால் உபதேசிக்கப்பட்டது

தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்
இத்துடன் வேறா இருந்து துதிசெயும்
பத்திமை யால்இப் பயனறி யாரே.   –  (திருமந்திரம் – 98)

விளக்கம்:
இந்த திருமந்திரத்தில் உள்ள தத்துவ ஞானங்கள் எல்லாம் சிவபெருமானால் கயிலாய மலையடிவாரத்தில் உபதேசிக்கப்பட்டவை. இதை உணர்ந்து கொள்ளாமல், இந்த திருமந்திரத்தை ஓதுபவர்கள்  (அவர்கள் முக்தி வேண்டி தவம் செய்யும் முனிவரானாலும், தேவரானாலும்)  இந்த நூலைப் படிப்பதனால் கிடைக்கக் கூடிய முழு பலனைப் பெறமாட்டார்கள்.

திருமந்திரம் படிப்பவர்கள், இதில் உள்ள தத்துவ ஞானங்கள் சிவபெருமானால் உபதேசிக்கப்பட்டவை என்பதை உணர்ந்து, பக்தியோடு படிக்க வேண்டும்.

(தாழ்வரை – மலை அடிவாரம்,   பத்திமை – பக்தி உடைமை)