வேதங்களைப் புரிந்து கொள்ளும் ஆசை

வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்
வேதாந்தங் கேட்டவர் வேட்கை விட்டாரே.  – (திருமந்திரம் – 229)

விளக்கம்:
வேதங்களின் நோக்கம் நமது ஆசைகளை ஒழிப்பதாகும். பொதுவாக வேதாந்தம் கேட்பவர்கள் தமது ஆசைகளை விட்டு விடுவார்கள். ஆனால் அந்தணர்கள் விருப்பத்தோடு வேதாந்தம் கேட்பது, வேதங்களை ஆராய்ந்து அவற்றின் பொருள் புரிந்து கொள்வதற்காக! வேதங்களின் உட்பொருளைப் புரிந்து கொள்ளும் ஆசையை அவர்கள் விடுவதில்லை.