ஆவையும் பாவையும் மன்னன் காக்க வேண்டும்

ஆவையும் பாவையும் மற்றுஅற வோரையும்
தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே. – (திருமந்திரம் – 243)

விளக்கம்:
ஒரு மன்னன் தன் நாட்டில் உள்ள பசுக்கள், பெண்கள், அற வழியில் நிற்கும் நல்லவர்கள், தேவர்களாலும் போற்றப்படும் உண்மையான துறவிகள் ஆகியவர்களைக் காக்க வேண்டும். காக்கவில்லை என்றால் அந்த மன்னன் மறுமையில் மீள முடியாத நரகத்தை அடைவான்.