நெருப்பு மலையாக நின்ற சிவபெருமான்

கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்
திருவருங் கோவென் றிகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி
அருவரை யாய்நின் றருள் புரிந் தானே. – (திருமந்திரம் – 362)

விளக்கம்:
பிரளயத்தின் போது ஏற்பட்ட வெள்ளத்தின் போது கரிய நிறம் கொண்ட பெரிய மலைகளும் நீரில் மூழ்கின. அந்நேரத்திலும் பிரமனும் திருமாலும் ஒற்றுமையில்லாமல் ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டனர். நம் இறைவனான சிவபெருமான் ஒளி மிகுந்த நெருப்பு மலையாக நின்று வெள்ள நீரெல்லாம் வற்றச் செய்தான். சிவபெருமானின் ஆற்றலைக் கண்ட பிரமனும் திருமாலும் சிவனே தலைவன் என்பதை உணர்ந்தார்கள். தம் தவற்றை உணர்ந்த அவர்களுக்கு சிவபெருமான் அருள் செய்தான்.