ஊனத்தின் உள்ளே உயிர்போல்!

தானக் கமலத் திருந்த சதுமுகன்
தானக் கருங் கடல் வாழித் தலைவனும்
ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற
தானப் பெரும்பொரு ளண்மைய தாமே. – (திருமந்திரம் – 377)

விளக்கம்:
உடலின் உள்ளே இருக்கும் உயிரை உணர்வது போல, சிவபெருமானை நாம் நம்முள்ளே தான் உணர முடியும். இது புரியாமல், தாமரை மலரை இருப்பிடமாகக் கொண்ட பிரமனும், பெரிய கடலை இருப்பிடமாகக் கொண்ட திருமாலும், நம் பெருமானை புற உலகில் தேடினார்கள். அவர்கள் சிவபெருமானின் தன்மையைப் புரிந்து கொள்ளவில்லை.