தன்னைக் கொடுத்து அறிவோம் சிவனை!

வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்
ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர்
ஆள்கொடுத் தின்பங் கொடுத்துக் கோளாகத்
தாள்கொடுத் தானடி சாரகி லாரே. – (திருமந்திரம் – 379)

விளக்கம்:
“தமக்கெல்லாம் பேரொளியாகக் காட்சி கொடுத்த நம் சிவபெருமானை, பிரமன், திருமால் முதலிய தேவர்கள் வழிபட்டார்கள். ஆனால் அவர்கள் என்னைப் போல, தன்னையே இறைவனிடம் ஒப்படைத்து வழிபடவில்லை. தன்னைக் கொடுத்தால் சிவனை அறியலாம். தன்னைக் கொடுத்தவர்க்கு இறைவனும் தன்னைத் தருவான், இன்பம் தருவான். நாம் வலிமை பெறும் பொருட்டு தம் திருவடியைப் பற்றிக்கொள்ளத் தருகிறான் நம் பெருமான். ஆனால் அந்தத் தேவர்கள் என்னைப் போல அவன் திருவடியைச் சார்ந்திருக்கவில்லை” – திருமூலர்.

One thought on “தன்னைக் கொடுத்து அறிவோம் சிவனை!

Comments are closed.