திரிபுரை அனைத்திலும் நிறைந்திருக்கிறாள்

அளியார் முக்கோணம் வயிந்தவந் தன்னில்
அளியார் திரிபுரை யாமவள் தானே
அளியார் சதாசிவ மாகி அமைவாள்
அளியார் கருமங்கள் ஐந்துசெய் வாளே. – (திருமந்திரம் – 401)

விளக்கம்:
திருவருள் நிறைந்தவள் சக்தி. அவளே திரிபுரையாகவும் விளங்குகிறாள். அவள் சதாசிவனுடன் நீங்காதிருந்து ஐந்தொழில்களிலும் துணையாக இருக்கிறாள். சுத்தமாயையின் காரியமாகிய பரவிந்து, அபர நாதம், அபரவிந்து என்னும் மூன்று நிலைக்களங்களிலும் அவள்  இருக்கிறாள்.