வனைய வல்லான்!

உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலுங் குடமுஞ் சிறுதூதை
மற்றும் அவனே வனையவல் லானே.   – (திருமந்திரம் – 417)

விளக்கம்:
நமக்கெல்லாம் உருவம் கொடுத்தவன் சிவபெருமான். உலகில் நாம் காணும் அனைத்துப் பொருட்களையும் உருவமைத்தவன் அவனே! அனைத்து உயிர்களிலும் அவனே இருந்து நமக்கெல்லாம் வடிவம் தருகிறான். தான் படைத்த உலகையும் அதில் வாழும் உயிர்களையும் காப்பவன் நம் சிவபெருமானே. உலகில் வாழும் உயிர்களுக்கு பிறவியை நிர்ணயிப்பவனும் அவனே. மனிதர்களை மட்டுமல்ல, சின்னஞ்சிறு உயிரினம் முதல் பெரிய விலங்குகள் வரை எல்லாவற்றையும் படைப்பவன் அவனே. அவனே வனைய வல்லான்.