நெருப்பு – சிவபெருமானின் கை அம்பு!

அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டது
அங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டது
அங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டது
அங்கியவ் வீசற்குக் கைஅம்பு தானே.   – (திருமந்திரம் – 421)

விளக்கம்:
சிவபெருமான் உலகை அழிப்பது நெருப்பினாலே. கடல் நீர் மிகாதவாறு தடுப்பதும் நெருப்பினாலே. அசுரர்களை அழித்ததும் நெருப்பினாலே. நெருப்பு சிவபெருமானின் கை அம்பாக விளங்குகிறது.