உயிரின் விதி விந்திலேயே தீர்மானமாகிறது!

கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்துமற் றோரார்
திருவின் கருக்குழி தேடிப் புகுந்த
உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே.  – (திருமந்திரம் – 454)

விளக்கம்:
மெய்யுணர்வு பெற்ற ஞானிகளால் மட்டுமே நிலம் முதல் புருடன் வரை ஆன இருபத்தைந்து தத்துவங்களையும் அறிய முடியும். பெண்ணின் கருப்பைக்குள் புகும் முன்னரே, ஆணின் விந்தில் அந்த இருபத்தைந்து தத்துவங்களும் பொருந்தி இருக்கிறது. இந்த உண்மையை ஞானிகளைத் தவிர மற்றவர்கள் உணர மாட்டார்கள். ஆணின் உடலில் உள்ள விந்து ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ, பெண்ணின் கருப்பைக்குள் ஓடிச்சென்று விழுகிறது.