குழந்தையின் இயல்பு தீர்மானமாகும் விதம்

ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்
மாற எதிர்க்கில் அரியவன் றானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்ப்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரர சாளுமே.  – (திருமந்திரம் – 458)

விளக்கம்:
ஆண் பெண் கூடலின் போது ஆணின் சுக்கிலம் எதிர்த்துச் சென்றால், பிறக்கும் குழந்தை உருத்திரனைப் போல தாமச குணம் மிகுந்ததாக இருக்கும். கூடலின் போது பெண்ணின் சுரோணிதம் எதிர்த்துச் சென்றால், பிறக்கும் குழந்தை திருமாலைப் போல சத்துவ குணம் மிகுந்ததாக இருக்கும். ஆணின் சுக்கிலமும், பெண்ணின் சுரோணிதமும் சம அளவில் கூடினால், பிறக்கும் குழந்தை பிரமனைப் போல இராசத குணம் மிகுந்ததாக இருக்கும். இவற்றுள் சத்துவ குணம் மிகுந்த குழந்தை, பின்னாளில் பேரரசை ஆளும்.

One thought on “குழந்தையின் இயல்பு தீர்மானமாகும் விதம்

Comments are closed.