நினையாதவர்க்கும் அருள்பவன்!

மனத்தில் எழுகின்ற மாயநன் நாடன்
நினைத்தது அறிவன் என்னில்தான் நினைக்கிலர்
எனக்குஇறை அன்பிலன் என்பர் இறைவன்
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே.  – (திருமந்திரம்)

விளக்கம்:
மனத்தில் தோன்றும் மாய நாடனான சிவபெருமான் நாம் மனத்தில் நினைப்பதை அறிவான் என்பதை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. சிலர் இறைவன் தன்னிடம் அன்பாய் இல்லை என்று சொல்லுவார், ஆனால் இறைவன் தன் ஆளுமையிலிருந்து தப்ப நினைப்பவருக்கும் அருள் செய்கிறான்.

(இறைவன் தன்னை நினையாதவரையும் காத்து நிற்கின்றான்).

The Lord who rise inside our mind
He knows our thoughts, but we are not aware of it
A few may tell 'God is not loving me'
But the Lord saves those people too who are not seeking him.