பரமனை அணுகி நிற்போம்.

ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்
பக்கநின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே.  – (திருமந்திரம்)

விளக்கம்:
உலகின் உயிர்கள் அனைத்திலும் உடனாய் நின்று பரவி இருப்பவனை, அழிவற்ற தேவர்களால் ‘முற்றும் துறந்தவன்’ என வாழ்த்தப்படும் அந்த இறைவனை, நாள்தோறும் பக்கத்தில் இருப்பவர் கூட உணர முடியாத சிவபெருமானை அணுகி நின்று நான் தினமும் வழிபடுவேனே!

(உலப்பிலி – அழிவற்ற,  ஒக்க நின்றான் – கலந்து நின்றான், நக்கன் – முற்றிலும் துறந்தவன்,  புக்கு நின்று – அணுகி நின்று)

He who stands with all, Whom the immortal Devas
Adore as a pure one, even the people, who
Stand beside him daily, not knowing his Nature.
I Seek Him and Praise Him.