நாண மாட்டேன் தழுவிக்கொள்ள!

காணநில் லாய்அடி யேற்குஉறவுஆருளர்
நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்
கோணநில் லாத குணத்தடி யார்மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்துநின் றானே.  – (திருமந்திரம்)

விளக்கம்:
சிவபெருமானே! நீ நாங்கள் கண்களால் பார்க்கும்படி  நிற்பது இல்லை. எனக்கு உன்னையன்றி வேறு உறவு யாரும் இல்லை. நான் உன்னை தழுவிக் கொள்ள வெட்கப்பட மாட்டேன். மாறுபாடு இல்லாத மனம் உடைய அடியவர் மனத்தில் ஆழப் பதிந்தவனாய் அமர்ந்திருக்கிறாய்.

(இறைவன் நம்முடைய புறக்கண்களுக்கு காட்சி தருவதில்லை. அவன் நமது மனத்தினுள் பதிந்து இருக்கிறான்.அவனை நினைத்து தியானிப்பதின் மூலம் அந்த இறைவனை நாம் உணரலாம்).

Oh the Unseen God, Who else is kin to me but You?
I'm not feeling shy to embrace You!
In the Pure Heart of your Devotee
You ever Stood Firmly.