எங்கள் அண்ணலின் பெருமை!

ஆரறி வார் எங்கள் அண்ணல் பெருமையை
யாரறி வார்இந்த அகலமும் நீளமும்
பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேரறி யாமை விளம்புகின் றேனே.   – (திருமந்திரம் – 95)

விளக்கம்:
யார் அறிவார் எங்கள் அண்ணலாகிய சிவபெருமானின் பெருமையை! யார் அறிவார் எம்பெருமான் இருக்கும் பரப்பின் அகலமும் நீளமும்! அந்த சிவபெருமான், பேர் அறியாத பெருஞ்சுடர் ஆவார். வேர் அறிந்து கொள்ள முடியாத அந்த பெருமானின் புகழ் கூறுகின்றேனே!

Who knows my Lord's Greatness!
Who can measure his dimension!
He is a nameless Mighty Flame,
I speak of his unknown Source.