திருவடி சரணம்

அரனடி சொல்லி அரற்றி அழுது
பரனடி நாடியே பாவிப்ப நாளும்
உரன்அடி செய்துஅங்கு ஓதுங்கவல் லார்க்கு
நிரன்அடி செய்து நிறைந்துநின் றானே. – (திருமந்திரம் – 43)

விளக்கம்:
சிவன் அடியை போற்றுவோம். அவன் அருள் கிடைக்க வேண்டுமென்று அரற்றி அழுவோம். அவன் திருவடியையே தினமும் நினைத்திருப்போம். மன உறுதியுடன் சிவன் திருவடியின் நினைவில் ஒதுங்கி இருக்க வல்லவர்க்கு அவன்  அடி எடுத்து நெருங்கி வருவான். நம்மிடையே நிறைந்து நிற்பான்.

(அரன் – சிவன்,   பரன் – கடவுள், உரன் – மன வலிமை,    நிரன் – நெருங்கி).

We speak of Siva's Holy Feet, weep and cry for his Grace
We think of His Holy Feet everyday.
For those who can surrender him, with strength of will
He comes close to them and pervade them.