விரதம் அவசியம்

பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதமில் லாதவர்
ஈட்டும் இடஞ்சென்று இகலல்உற் றாரே. – (திருமந்திரம் – 56)

விளக்கம்:
பாட்டும், இசையும், பரந்து ஆடும் பொது மகளிர் ஆட்டமும் நீங்காத இந்த உலகில், அவற்றில்  மாட்டிக் கொள்ளாதவர்கள் உண்டு. அவர்கள் வேள்வி செய்யும் விருப்பம் கொண்டவராய் இருப்பர். அப்படி உறுதி இல்லாதவர் பயன் அனுபவிக்கும் இடம் சென்று சிக்கலில் மாட்டிக் கொண்டாரே.

(ஆட்டு – நடனம்,   அவனி – உலகம்,   விரதம் – உறுதி,   இகல் – சிக்கல்).

Detach from the world of song, music and prostitute's dance
Such people Seek the Holy Sacrifice to perform.
Those who don't have observance, seek the
world of desire, get caught in misery.