திராணி இல்லாத பிராணிகள்

பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற்கு அரிய பிரானடி பேணார்
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரியதோர் பேறுஇழந் தாரே. – (திருமந்திரம் – 2090)

விளக்கம்:
பெறுவதற்கு அரியதான பிறவியைப் பெற்றிருந்தாலும், நாம் அதன் அருமை தெரியாமல், பெறுவதற்க்கு அரியதான சிவபெருமானின் திருவடியை போற்றாமல் இருக்கிறோம்.

மனிதனாக பிறப்பது மிக அரிய விஷயம். அதை நாம் உணராமல் பெறுதற்கரிய சிவபேற்றை அடையும் வாய்ப்பை இழக்கிறோம்.

It is rare to get this birth
Yet we are not seeking Lord's feet.
It is rare to get birth as human
Yet we are missing the rare to get blessings of Siva.