ஐந்து சிங்கங்கள்

அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன
அஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சுஅக மேபுகும்
அஞ்சின் உகிரும் எயிரும் அறுத்திட்டால்
எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே. – (திருமந்திரம் – 2026)

விளக்கம்:
நம் உடல் ஒரு காடு. அதில் ஐம்பொறிகளாகிய ஐந்து சிங்கங்கள் வாழ்கின்றன. இந்த ஐந்து சிங்கங்களும் வெளியே சென்று மேய்ந்து, பார்ப்பதை எல்லாம் ஆசைப்பட்டு வந்து நம் மனம் புகுந்து பிராண்டுகின்றன. இந்த சிங்கங்களின் நகங்களையும் பற்களையும் பிடுங்கி விட்டால் நாம் இறைவனை அடைவது உறுதி.

(அடவி – காடு,  அகம் – மனம்,    உகிர் – நகம்,  எயிறு – பல்)

Within us five lions are living, they are our five senses
They roam outside and return to our mind.
If we remove the claws and teeth of that lions,
It is sure that we shall reach God.