தூங்கும் போதும் நின் திருவடியே சரண்

நெஞ்சு நினைந்துதம் வாயாற் பிரான்என்று
துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று
மஞ்சு தவழும் வடவரை மீதுறை
அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே.  – (திருமந்திரம் – 2707)

விளக்கம்:
நம் சிவபெருமானை நெஞ்சில் நினைந்து, வாயால் சிவாயநம என்று சொல்லி, தூங்கும் பொழுதும் நின் திருவடியே சரண் என்று இருக்க வேண்டும். அப்படி இருந்தால் பனி தவழும் கைலாய மலையில் வசிக்கும், ‘சிவாயநம’ என்னும் திருவைந்தெழுத்தின் அம்சமான சிவபெருமானின் அருளைப் பெறலாம்.

(துஞ்சு – தூங்கு,   தாள் – திருவடி,    மஞ்சு – பனி)

Thinking of the Lord in our heart, we chant SIVAYANAMA,
Even while sleeping, we seek His Holy Feet.
If so we behave, sure we’ll get the Grace of the Lord,
Who resides in the snow clad mountain Kailas, in the form of the Letters ‘SIVAYANAMA’