மெய்த்தவம் செய்பவரிடம் வந்து அமர்வான் சிவன்

இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறி வாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி யாக அமருகின் றானே.  –  (திருமந்திரம் – 19)

விளக்கம்:
சிவபெருமான் ஏலம் போன்ற வாசனை கமழும் எழு உலகங்களைப் படைத்தவன். அவற்றை அழிப்பவனும் அவனே! பிறைச்சந்திரனை அணிந்திருக்கும் அவன், அனைத்தும் அறிந்த மூதறிவாளன். அவன் தன்னை நோக்கி மெய்த்தவம் செய்பவரின் மனத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்டு அருள்பவன்.

The Lord created the fragrant seven worlds.
He is the destroyer of all worlds too.
He is the wisest of all. For those who do penance
over Him, He'll abide in their hearts.