சிவன் பார்வையிலிருந்து ஓடி ஒளிய வேண்டாம்

குறைந்துஅடைந் தீசன் குரைகழல் நாடும்
நிறைந்துஅடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும்
மறைஞ்சடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்
புறஞ்சடம் செய்வான் புகுந்துநின் றானே. – (திருமந்திரம் – 40)

விளக்கம்:
சிவபெருமானைத் தாழ்மையுடன் வணங்கி அவன் திருவடியை நாடி இருப்போம். சிவன் திருவடி செம்பொன்னின் ஒளியைப் போன்று பிரகாசமாய் இருக்கும். நாம் அவனிடம் இருந்து ஓடி ஒளிய நினைக்காமல் வணங்கியிருந்தால், அந்த ஈசன் நம்மை புறக்கணிக்காமல் நம்முள் புகுந்து நிற்பான்.

Humble and meek, let us seek the Lord's feet,
Which can be compared to the shine of purest gold.
Don't try to hide yourself from the Lord.
For those who praise Him, He won't neglect them. He'll enter their heart.