வேயன தோளிக்கு வேந்தன்

போய்அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயக னான்முடி செய்தது வேநல்கும்
மாயகம் சூழ்ந்து வரவல்ல ராகிலும்
வேயன தோளிக்கு வேந்தொன்றும் தானே. – (திருமந்திரம் – 42)

விளக்கம்:
சிவபெருமானை விரும்பிச் சென்று புகழ்வார் பெறுவது, நான் என்னும் அகங்காரம் அழிந்து சிவபோதம் அடையும் வரமாகும். மாயைகளில் சிக்கி தன்னிடம் வராதவர்களுக்கும், மூங்கில் போன்ற தோள் உடைய உமையின் கணவனான சிவபெருமான் வந்து அருள்வான்.

Those who seek the Lord will get their
egotism destroyed and will be in Grace of Siva.
Some may be caught in maya and forget the Lord,
For them too, the Lord, husband of Sakthi, come closer.