இன்னொரு நிழல்

ஆவிட் (Ovid) எனும் ரோம் நாட்டுக் கவிஞர் எழுதிய துரோகம் பற்றிய கவிதை ஒன்றை விருத்தமாக எழுத முயன்றேன்.

கரும்பாய் இனித்தவள் தீஞ்செய்கை
…. கசந்தும் உவப்பது அவள்தடவுகை!
அரும்பாய் மணப்பவள் எயிற்றினிலே
…. அமுதூறும் விடம்போல் பொய்யுமூறும்!
துரும்பென உணர்ந்தேன் வஞ்சியவள்
…. துடியிடை யில்நகக் குறிகண்டு!
தரும்என துயிர்தரும் சுகமனைத்தில்
…. தவிரஇன் னொருநிழல் விழக்கண்டேனே!

One thought on “இன்னொரு நிழல்

Comments are closed.