இந்துவும் பானுவும்

இந்துவும் பானுவும் இருவரும் உயரமாய்
பந்தென ஆடுவார் பளிச்சிடும் ஒளியுடன்!
இந்துவந் தாடுவாள் இரவிலே குளிர்ச்சியாய்
முந்திடு பானுவை, முன்னெழு தினமே!

(இந்து – நிலா, பானு – சூரியன். அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன் எழ வேண்டும் என்பதே இந்த பாடலின் பொருள்)