தனிக்கூத்து கண்ட திருமூலர்

செப்புஞ் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பில் எழுகோடி யுகமிருந் தேனே. – (திருமந்திரம் – 74)

திருமூலர் சொல்கிறார் – ”நான் சொல்லும் இந்த திருமந்திரம் சிவாகமம் என்னும் பேர் பெற்றது, அந்த ஆகமத்தை எனக்கு அருளிய நந்தி பெருமானின் திருவடியை நான் பெற்றதாலேயே! தில்லையம்பலத்தில் அந்த சிவபெருமானின் ஒப்பற்ற நடனத்தை கண்டபின் ஒப்பளவில் ஏழு கோடி யுகம் இருந்தேன்”.