நந்தியின் திருவடி நிழல்

இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே. – (திருமந்திரம் – 80)

காயம் என்பதற்கு ஒரே நிலையில் இருத்தல் என்றும் ஒரு பொருள் உண்டு, அது இங்கே பொருத்தமாக அமைகிறது.

திருமூலர் சொல்கிறார் “நான் இந்த யோக  நிலையில் எண்ணில்லாத கோடி வருடங்கள் இருக்கிறேன். இரவும் பகலும் இல்லாத பிரகாச வெளியிலே இருக்கிறேன். தேவர்கள் எல்லாம் துதிக்கும் இடத்தில் இருக்கிறேன். என் நந்தியம்பெருமானின் திருவடி நிழலில் எப்போதும் இருக்கிறேன்.”

One thought on “நந்தியின் திருவடி நிழல்

  1. சதாசிவ தியான யந்திரம்
    http://saramadikal.blogspot.in/2013/06/blog-post_10.html
    இவை அனைத்தும் நம் பீடத்தில் கிடைக்கும்
    வாருங்கள் நன்மையை மட்டும் பெற்று செல்லவும்

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
    தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

    நன்றி
    சாரம் அடிகள்
    94430 87944
    74184 70208

Comments are closed.