காலாங்கி நாதருக்கு ஃபேஸ்புக் பிடிக்காது

சித்தர் காலாங்கி நாதர் எனக்கு அருளிய பிரத்தியேக உபதேசம் இது.

பேசவே தெரியா உனக்கிந்த
…… ஃபேஸ்புக் பக்கம் ஒருகேடா?
நாசமாய் போச்சே உனதுபணி
….. நேரம் முழுதும் வீணாச்சே!
காசதைப் பாரடா நீயென்ன
….. கருத்துகந் தசாமி பெற்றவனா?
நேசமாய் பாரடா வெளியுலகினை
….. நட்பென ஆகுமே உலகமெல்லாம்.!