இயல்பான சோதி வடிவம்

பிதற்றுகின் றேனென்றும் பேர்நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்
முயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை
இயற்றிகழ் சோதி இறைவனு மாமே.  – (திருமந்திரம் – 94)

விளக்கம்:
நான் தினமும் நந்தி என்னும் பெயருடைய இறைவனின் புகழை சொல்லிக் கொண்டே இருக்கிறேன். இரவும் பகலும் அப்பெருமானை என் மனத்தில் வைத்து தியானிக்கிறேன். உயர்ந்த ஒளி வடிவமான அந்த இறைவனை அடைய தொடர்ந்து முயல்கிறேன். சிவபெருமானின் அந்த சோதி வடிவம் இயல்பாகவே திகழ்வதாகும்.

(ஓங்கொளி – ஓங்கு + ஒளி,  இயற்றிகழ் – இயல் + திகழ்)