வாழ்நாளை வீணாக்க வேண்டாமே!

காலை ஏழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாணாள் கழிவதும்
சாலும்அவ் ஈசன் சலவிய னாகிலும்
ஏல நினைப்பவர்ககு இன்பம்செய் தானே. – (திருமந்திரம் – 182)

விளக்கம்:
தினமும் காலையில் எழுகிறோம். மாலையில் உறங்கச் செல்லும்போது, ஒருநாள் நிறைவடைந்து, நமது வாழ்நாளில் ஒரு நாள் குறைகிறது. இதை உணர்ந்து, நாம் நமது வாழ்நாளை வீணாக்காமல், அந்த ஈசனை நினைத்து அவனைச் சார்ந்திருப்போம். அந்த ஈசன் கோபம் கொண்டவன் என்றாலும், தன்னை உணர்வுபூர்வமாக நினைப்பவர்களுக்கு இன்பம் அளிக்கிறான்.