ஐந்து பறக்கும் மிருகங்கள்

பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்
பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்
பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்
பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே. – (திருமந்திரம் – 183)

விளக்கம்:
ஐம்புலன்களான சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் ஆகியவற்றை ஐந்து பருத்த ஊசிகள் என்று சொல்கிறார் திருமூலர். இந்த ஐந்து ஊசிகளும் நம் உடல் என்னும் தோல்ப் பைக்குள் வாழ்கின்றன. இந்த ஐந்து ஊசிகளும் பறக்கும் தன்மை கொண்ட மிருகங்களாகும். ஐம்பொறிகளான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை தளர்ச்சி அடையும் போது, அந்த ஐந்து பரு ஊசிகளும் வெளியே பறந்து சென்று விடும். இந்தத் தோல்ப் பையும் கூடவே பறந்து விடும். அதனால் ஐம்பொறிகள் ஆரோக்கியமாக இருக்கும் இளமைக் காலத்திலேயே அந்த ஈசனை நினைத்து அவனைச் சார்ந்திருப்போம்.