நியமத்தில் நிற்பவரின் குணங்கள்

தூய்மை  அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமங் களவு கொலையெனக் காண்பவை
நேமியீ ரைந்து நியமத்த னாமே.  –  (திருமந்திரம் – 556)

விளக்கம்:
தூய்மை, கருணை, சுருங்கிய உணவு, பொறுமை, நேர்மை, உண்மை, உறுதியுடைமை ஆகியவற்றைக் கடைபிடிப்போம். காமம், களவு, கொலை ஆகியவற்றை விலக்குவோம். இவை அனைத்தும் நியமத்தில் நிற்பவர் மேற்கொள்ள வேண்டிய விஷயங்களாகும்.

பொறை – பொறுமை, செவ்வை – நேர்மை,  நேமி – சிந்தித்தல்