பிராணாயாமம் மகிழ்வு தரும்

புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்
கள்ளுண்ண வேண்டாந் தானே களிதருந்
துள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே.   – (திருமந்திரம் – 566)

விளக்கம்:
பறவையை விட விரைவாக ஓடக்கூடிய நம் மூச்சுக்காற்று என்னும் குதிரையை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வோம். அப்படி கட்டுப்படுத்தினால் கள் உண்ணாமலே மகிழ்வு உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும், சோம்பல் நீக்கி சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். ஆர்வத்தோடு பிராணாயாமப் பயிற்சியை செய்து வந்தால் இவற்றை நாம் உணரலாம் .