மனத்தை உள்நோக்கித் திருப்புவோம்

கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்
கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம்
பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை
இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே.    – (திருமந்திரம் – 578)

விளக்கம்:
மனத்தை வெளியே செல்ல விடாமல் தடுத்து, உள்நோக்கிப் பார்த்தால் உள்ளே நமது இயல்பான ஒளி மிகுந்த குணங்களைக் காணலாம். பழங்காலத்திலிருந்து எங்கெங்கோ விரும்பித் தேடப்படும் பரம்பொருளை நாம் இன்றே இங்கே நமக்குள் காணலாம்.

பரம்பொருளான சிவபெருமானை வெளியுலகிலும், வேதங்களிலும் தேடுவதை விட்டு, மனத்தை உள்நோக்கு முகமாக திருப்பி நமக்குள்ளேயே அந்த பரம்பொருளைக் காணலாம்.

பண்டு – பழங்காலம்,  உகந்து – விரும்பி