தியானம் மரண பயத்தை நீக்கும்

பள்ளி அறையிற் பகலே இருளில்லை
கொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம்
ஒள்ளி தறியிலோ ரோசனை நீளிது
வெள்ளி அறையில் விடிவில்லை தானே.  –  (திருமந்திரம் – 611)

விளக்கம்:
தியானம் செய்பவர்க்கு பள்ளியறையாகிய உள்ளம் ஒளிமயமாக இருக்கும், அங்கே இருள் கிடையாது. அவர்களுக்கு கொள்ளியறையாகிய சுடுகாட்டின் சூட்டைப் பற்றிய கவலை  இராது. இந்த நுண்ணறிவைப் பெற்ற யோகியர், தாங்கள் காணும் உள்ளொளி நாலு காத தூரம் நீண்டிருப்பதைக் காணலாம். அந்த ஒளிமயமான வெள்ளி அறையிலே அச்சத்திற்கு இடமே கிடையாது.

ஒள்ளி – ஒண்மை, நுண்ணறிவு,   ஓசனை – நாலு காத தூரம்,   விடிவு – அச்சம்