குளிர்ச்சியான ஒளி!

ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை
ஒண்சுட ராகிஎன் உள்ளத்து இருக்கின்ற
கண்சுட ரோன் உலகு ஏழும் கடந்த அத்
தண்சுடர் ஓமத் தலைவனு மாமே.  – (திருமந்திரம் – 221)

விளக்கம்:
நாம் செய்யும் வேள்விகளின் தலைவன் யார் தெரியுமா? அவன் எல்லா ஒளிகளுக்கும் மேலான ஒளியாக இருப்பவன், இறப்பு என்பதே இல்லாதவன். நம் உள்ளத்திலும் அவன் மூன்று கண்களுடன் ஒளி வீசி வசிக்கிறான். ஏழு உலகங்களிலும் பரவி இருக்கின்ற அவனுடைய ஒளி குளிர்ச்சியானது, அருள் நிறைந்தது. நாம் செய்யும் வேள்விகள் அந்த சிவபெருமானை நினைந்து இருக்க வேண்டும்.