அந்தணரின் கடமைகள்

அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
தந்தவ நற்கரு மத்துநின்று ஆங்கிட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே.  – (திருமந்திரம் – 224)

விளக்கம்:
அந்தணர் என்போர் ஆறு தொழில்களைக் கடமையாகக் கொண்டவர் ஆவார். அந்த ஆறு தொழில்கள் ஓதல், ஓதுவித்தல், தவம், வேட்டல், ஈட்டல், ஈதல் ஆகியவை ஆகும். அவர்கள் நியமத்தில் நின்று, மூன்று பொழுதும் அக்னிக் காரியங்களைச் செய்கிறார்கள். இந்த வேள்விகளைக் கடமையாக இல்லாமல், ஒரு தவம் போலக் கருத்துடன் செய்கிறார்கள். மேலும் அவர்கள்  மாலை நேரத்திலும் வேதங்கள் ஓதித் தங்கள் கடமைகளைத் தவறாது செய்கிறார்கள்.