நோயின்றி வாழலாம்

இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்
தருமஞ்செய் யாதவர் தம்பால தாகும்
உருமிடி நாகம் உரோணி கழலை
தருமம்செய் வார்பக்கல் தாழகி லாவே. – (திருமந்திரம் – 263)

விளக்கம்:
தருமம் செய்யாதவரை இருமல், சோகை, ஆஸ்துமா, தொழு நோய் ஆகியவை உரிமை கொண்டாடும். அச்சம் தரும் இடி, பாம்பு, தொண்டைப் புண், வயிற்றுக் கட்டி ஆகியவை தருமம் செய்பவர் பக்கம் நெருங்காது.

(தருமம் – நற்செயல்,   ஈளை – ஆஸ்துமா,  வெப்பு – தொழு நோய், உரோணி – தொண்டைப் புண்,  கழலை – வயிற்றுப் புண்)