முதலை ஒன்று வளர்த்தேன்

முதலை ஒன்று வளர்த்தேன்
ஆமாம் முதலை தான்.
ஆதரவாய்ப் பிடித்துக்கொள்ள
அந்த சொரசொரப்பு தோதாக இருந்தது.

உச்சக்கட்ட அச்சத்தை ரசித்தபடி
கொல்வதே ருசியானது.
உண்பதெல்லாம் வெறும் பசிக்குத்தான்.
அதன் வியாக்கியானத்தைக் கேட்டால்
முதலையாய் பிறந்திருக்கலாமோ?

முதலைக்குத் தினமும் தேவை
கொஞ்சம் இளஞ்சூட்டுக் குருதி.
அதைத் தர எனக்குப் பிடிக்காதவர் பலர்!

என்னைப் பிடிக்காதவர் இருக்கலாம்
எனக்குப் பிடிக்காதவர் தேவையே இல்லை.

காலங்கடந்த வேளையிலே
ஒருநாள் புரிந்தது
நான் தான்
வளர்க்கப்படுகிறேன்
என்னும் உண்மை.

One thought on “முதலை ஒன்று வளர்த்தேன்

  1. அற்புதம்
    குறிப்பாக ஈற்றடி
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Comments are closed.