நல்வாழ்விற்கு வழித்துணையாய் வருபவை

துணையது வாய்வரும் தூயநற் சோதி
துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம்
துணையது வாய்வரும் தூயநற் கந்தம்
துணையது வாய்வரும் தூயநற் கல்வியே. – (திருமந்திரம் – 294)

விளக்கம்:
நல்வாழ்விற்கு வழித் துணையாய் வரும் விஷயங்கள் இவை.

  • தூய நற்சோதி (சோதி வடிவான சிவபெருமான்).
  • தூய நல் சொற்கள் (இனிய சொற்களை மட்டும் பேசுதல்).
  • தூய நல் சுக்கிலம் (சுக்கிலம் கெடாமல் காத்தல்).
  • தூய நல் கல்வியினால் மேல் சொன்ன மூன்று துணைகளையும் பெறலாம்.

(கந்தம் – சுக்கிலம்)