தேவர்களை விட மிகுந்த பேரின்பம் பெறலாம்

பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே. – (திருமந்திரம் –298)

விளக்கம்:
ஏதாவது ஒன்றை பற்றிக்கொள்ள வேண்டுமென்றால் நாம் அந்த பரமனைப் பற்றிக்கொள்வோம். அந்தப் பற்று முழுமையாக இருந்தால் முதல்வனாம் சிவமெருமானின் அருளைப் பெறலாம். சாமர்த்தியம் மிகுந்த தேவர்களை விட கல்வியின் மூலம் இறைவனை உணர்ந்தவர்கள் மிகுந்த பேரின்பம் பெறுகிறார்கள்.