நம் உள்ளே ஊறும் மது

வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர்
காமத்தோர் காமக்கள் ளுண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே. – (திருமந்திரம் – 327)

விளக்கம்:
தீயவர்கள் தான் மது அருந்துகிறார்கள், அதனாலேயே சீக்கிரம் சாகிறார்கள். காமத்தை மதுவாக நினைத்துக் கொண்டாடுபவர்கள், வாழ்க்கையில் மிகுந்த துன்பத்துக்கு ஆளாவார்கள். வெளியே கிடைக்கும் மதுவால் தான் இத்தனை துன்பம் எல்லாம். வேள்வியினால் நமக்குள்ளே தோன்றும் உள்ளொளியில் ஒரு மது ஊறும். சிவ நாமத்தை ஓதுபவர்கள் அதை உணர்வார்கள். உள்ளூறும் அந்த மதுவை ருசிக்கும் சிவனடியார்கள் அன்றே சிவனை சமீபத்தில் காணும் இன்பம் பெறுவார்கள்.