மது உண்மையை மறைக்கும்

உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம்
வள்ளன்மை நாதன் அருளினன் வாழ்வுறார்
தெள்ளுண்மை ஞானச் சிவயோகம் சேர்வுறார்
கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே. – (திருமந்திரம் – 328)

விளக்கம்:
மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் வேதங்களின் கருத்தை அறிய மாட்டார்கள். பதி, பசு, பாசம் என்பவற்றில் உள்ள உட்பொருளை அவர்கள் உணர்வதில்லை. அருளை வாரி வழங்கும் வள்ளலான சிவபெருமானிடம் அருள் பெற்று நல்லதொரு வாழ்க்கை வாழ மது அருந்துபவர்களுக்குத் தெரியாது. அவர்கள் தெளிந்த ஞானம் பெற்ற சிவயோகியரோடும் சேர மாட்டார்கள்.