அகத்தில் இருப்பவர் அகத்தியர்

நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து
கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னிரென் றானே. – (திருமந்திரம் – 337)

விளக்கம்:
”உலகத்து மக்களெல்லாம், தம் மனத்தை சுழுமுனையில் பொருந்தி இருக்கச் செய்யாமல், உலக விஷயங்களையே விரும்புகிறார்கள். அதனால் இந்த உலகம் சமநிலை இல்லாமல் சரிகிறது பெருமானே!” என்று தேவர்களெல்லாம் சிவபெருமானிடம் சென்று வேண்டினர். பெருமானும் “அக்னி சொரூபமாக மூலாதாரத்தில் நிற்கும் அகத்தியரே! நீ சீவன்களின் தலைப்பகுதிக்கு விரைந்து சென்று அங்கேயே பொருந்தி இரு” என்றார்.