நம் சிரசில் பரவி இருப்பார் அகத்தியர்

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு
மங்கி உதயஞ்செய் வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே. – (திருமந்திரம் – 338)

விளக்கம்:
நம்முள்ளே குண்டலினி என்னும் அக்னியை உண்டாக்கி வளர்ப்பவர் அகத்தியர். வளரும் அந்த அக்னியை நம்முடைய சிரசில் ஏற்ற உதவுபவர் அகத்தியர். சிரசில் ஏறிய அக்னியை சீராகப் பரவச் செய்பவர் அகத்தியர். அகத்திய முனிவர் நம் சிரசில் எங்கும் ஒளியாகப் பரவி இருக்கிறார்.