தக்கனுக்குக் கிடைத்த பாடம்

கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தானங்கி யிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையை யரிந்திட்டுச் சந்திசெய் தானே. – (திருமந்திரம் – 340)

விளக்கம்:
பிரமனின் மகனாகிய தக்கன், சிவபெருமானைப் புறக்கணித்து வேள்வி செய்தான். இதனால் சினம் கொண்ட சிவன், வீரபத்திரனை அனுப்பி, தக்கனின் தலையை வெட்டித் தீயில் எறியச் செய்தான். பிறகு தன் மனம் இரங்கி, இவனது செயல் உலகில் உள்ளோர்க்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என்று எண்ணி, ஒரு ஆட்டுத்தலையை தக்கனுக்குப் பொருத்தி அவனை உயிர் பிழைக்கச் செய்தான். இந்தச் செயல் நிகழ்ந்த இடம் திருப்பறியலூர்.

நம்முள்ளே இருக்கும் வேள்வித்தீயாகிய குண்டலினி சக்தியை விரயம் செய்யக்கூடாது என்பது இந்நிகழ்வில் உள்ள தத்துவம்.