சிவபெருமானின் கோபம்

தந்தைபி ரான்வெகுண் டாந்தக்கன் வேள்வியை
வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்
சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே.  – (திருமந்திரம் – 353)

விளக்கம்:
தக்கன் தீ வளர்த்துச் செய்த தனது வேள்வியில், தேவர்களுக்கெல்லாம் தலைவனான சிவபெருமானுக்கு முதல் ஆகுதியைச் செய்யத் தவறினான். அங்கிருந்த தேவர்களும் தக்கனுக்கு அறிவுறுத்தவில்லை. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் வீரபத்திரரை அனுப்பி வேள்வியில் ஈடுபட்டிருந்த தக்கனையும், தேவர்களையும் அழித்தான்.

One thought on “சிவபெருமானின் கோபம்

Comments are closed.