சிவனருளை இழந்த தேவர்கள்

அரிபிர மன்தக்கன் அருக்க னுடனே
வருமதி வாலை வன்னிநல் இந்திரன்
சிரமுக நாசி சிறந்தகை தோள்தான்
அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.  – (திருமந்திரம் – 358)

விளக்கம்:
தக்கன் வேள்விக்குத் துணை போனதால் திருமால், பிரமன், தக்கன், சூரியன் ஆகியோருடன் சந்திரன், நாமகள், அக்னி, இந்திரன் ஆகியோரும் தலை, முகம், மூக்கு, கை, தோள் ஆகியவற்றை இழந்தனர்.